என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 14 ஜூன், 2025

பாடல் (79) செய்வோம் சிறந்த பல தொண்டு !

"தமிழரசு"  இதழ் "செய்வோம் சிறந்த பல தொண்டு" என்பதை  ஈற்றடியாகக்  கொண்டு   வெண்பா எழுதி அனுப்புமாறு கோரி  அறிவித்த    வெண்பாப் போட்டிக்கு 1970 -ஆம் ஆண்டு நான் எழுதி அனுப்பிய நான்கு  வெண்பாக்கள் ! நான்கும் "தமிழரசு இதழில் வெளியாயின  ! 

---------------------------------------------------------------------------------

           கொய்வோம்  அருங்கனியாம்  அண்ணாவின்   கருத்துரைகள்

           பெய்வோம்    பிழையறியா    உள்ளமதில்  ---   ஆய்ந்துணர்ந்து

           உய்வோம்;    அவர்சென்ற     உண்மைவழி     நாம்தொடரச்

           செய்வோம்    சிறந்தபல       தொண்டு !

 

           

           மெய்மைப்   பொருளுணர்ந்து  மேதினியில்     நாம்வாழ

           பொய்மைச்  சுழல்நீந்திப்        போவதலால் --- வாய்மையெனும்

           பாய்மம்      பொங்கிவரப்      பார்மிசையில்   வாழ்வதுடன்

           செய்வோம்  சிறந்தபல          தொண்டு !

 

 

           ஏய்க்கும்    நரிமதியில்     எய்திடுவோம்     கூரம்பு

           மாய்க்கும்  வறுமைப்பேய்  மாண்டுவிழ   ---  நாய்க்குணவாய்ப்

           பெய்யும்    கழுநீரைப்       பிச்சைகொளும்  நிலைமாற

           செய்வோம் சிறந்தபல       தொண்டு !

 

 

           காஞ்சித்     தவப்புதல்வன்  கண்மணியாம்   அண்ணாபோல்

           வாஞ்சை    மிகக்கொண்டு  வண்டமிழை ---  நெஞ்சமதில்

           ஆய்வோம்;  உயிர்மூச்சாய்  ஆக்கிடுவோம்    மேதினியில்

           செய்வோம்  சிறந்தபல       தொண்டு !

 -----------------------------------------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(14-06-2025)

-------------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக