1980 - ஆம் ஆண்டு வாக்கில் தான் பணிபுரிந்த தொழிலகத்திலிருந்து விடுபடும் பொருட்டு, தொழிலக உரிமையாளர் அருட்திரு வாசுதேவனார் அவர்கட்கு மீ. கோவிந்தராசு அணிவித்த நன்றிப் புகழ் மலர் !
=======================================
(பாடல் புனைவு: வை. வேதரெத்தினம்)
=======================================
அன்பைச் சொரிந்து வரும் அருவி ! -- கருணை
அழகு
ததும்புகின்ற ஊற்று ! – ஒளிரும்
பொன்னில் உறவு கொண்ட மேனி !
– விழியில்
பொங்கி வழிந்து வரும் நிலவு ! – எனது
நெஞ்சில் குடிபுகுந்த
தென்றல் – அழியா
நினைவில் வளர்ந்துவரும் கவிதை ! – அழகு
கொஞ்சும் இளம்பரிதி
உதயம் -- மின்னும்
கூடல் இறைமகுடக் கலசம் ! !
பொங்கு மாங்கடலில்
துஞ்சி விழிதிறந்து,
பொன்னின் மணியிறைக்கும் சுடரோன் ! – தரணி
எங்கும் உயிரினங்கள் உயிர்த்து எழுச்சிபெற,
இறைமை
செய்துவரும் அருளோன் ! -- ஆற்றல்
மிஞ்சும் தொழிலகத்தின் உரிமைத் தவிசினிலே,
அமர்ந்து
கோலோச்சும் தலைவா ! - உம்மைத்
தஞ்சம் எனவடைந்து கெஞ்சும்
இளையவனை
“அஞ்சேல்” எனவுரைத்து அருள்க ! !
கஞ்சு இளங்குயிலின் குரலைக்
கேட்டுமனம்
குளிர்ந்து அன்பைத் தந்து அருள்க !
பஞ்சு விழிக்கடையில்
கெஞ்சும் நீர்த்துளிகள்
படைக்கும் எளியமொழி கேளீர் ! -- மனம்
அஞ்சித் துடிதுடித்து அயர்ச்சி கொண்டஎனை
“அஞ்சேல்” எனவுரைத்து அருள்க !
வணிகத் துறையின் அடிமுடியறிந்த
வயமாப் பெருந் திறலோய் ! – மடல்
வாடியபயிரின் சோர்வினைச் சகியா
வளம்பொதி
நீரூற்றே !
துணிவுடன் வினைகள் துல்லியமாகத்
துளங்கிடக்க செய்தலைவா – நின்
தூமொழியால் எனை ஆசீர்வதித்து
அருள்செய் தருள்வாயே !
பிணிசூழ் நெஞ்சில் விழிநீர் துடைக்கும்
பேரருள் தகையோயே -இப்
பிள்ளையின் மனதில் ! என்றும் நீங்காப்
பேரிடம் கொண்டனையே !
பணிமனை தன்னில் அணிமலராகப்
பழகிடும் திருமலரே ! – சிறு
பாலகன் உரைக்கும் நன்றிகள் ஏற்று
ஆசிகள்
அருள்வாயே !
என்றும் தங்கள் ஆசியை
வேண்டும்,
மீ. கோவிந்தராசு,
வை . வேதரெத்தினம்
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ
(12 -06-2025)
-------------------------------------------------------------------------------------------
00-00-1980
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக