கொத்து (01) மலர் (019)
வெண்பாக்கள் !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" முகநூல்.
திருவள்ளுவராண்டு 2056, விடை (வைகாசி) (31)
14-06-2025
கொத்து (01) மலர் (019)
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" முகநூல்.
திருவள்ளுவராண்டு 2056, விடை (வைகாசி) (31)
14-06-2025
"தமிழரசு" இதழ் "செய்வோம் சிறந்த பல தொண்டு" என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பா எழுதி அனுப்புமாறு கோரி அறிவித்த வெண்பாப் போட்டிக்கு 1970 -ஆம் ஆண்டு நான் எழுதி அனுப்பிய நான்கு வெண்பாக்கள் ! நான்கும் "தமிழரசு இதழில் வெளியாயின !
---------------------------------------------------------------------------------
கொய்வோம் அருங்கனியாம் அண்ணாவின் கருத்துரைகள்
பெய்வோம்
பிழையறியா உள்ளமதில் ---
ஆய்ந்துணர்ந்து
உய்வோம்;
அவர்சென்ற
உண்மைவழி நாம்தொடரச்
செய்வோம்
சிறந்தபல
தொண்டு !
மெய்மைப்
பொருளுணர்ந்து மேதினியில்
நாம்வாழ
பொய்மைச் சுழல்நீந்திப்
போவதலால் --- வாய்மையெனும்
பாய்மம்
பொங்கிவரப்
பார்மிசையில் வாழ்வதுடன்
செய்வோம் சிறந்தபல
தொண்டு !
ஏய்க்கும் நரிமதியில்
எய்திடுவோம் கூரம்பு
மாய்க்கும் வறுமைப்பேய் மாண்டுவிழ --- நாய்க்குணவாய்ப்
பெய்யும்
கழுநீரைப்
பிச்சைகொளும் நிலைமாற
செய்வோம் சிறந்தபல
தொண்டு !
காஞ்சித்
தவப்புதல்வன் கண்மணியாம் அண்ணாபோல்
வாஞ்சை
மிகக்கொண்டு வண்டமிழை --- நெஞ்சமதில்
ஆய்வோம்; உயிர்மூச்சாய் ஆக்கிடுவோம்
மேதினியில்
செய்வோம் சிறந்தபல
தொண்டு !
வை . வேதரெத்தினம்
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சிப்பி" வலைப்பூ
(14-06-2025)
-------------------------------------------------------------------------------------------
-