என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

காணக் கிடைக்காத லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணக் கிடைக்காத லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜூன், 2022

பாடல் (41) (1971) காணக் கிடைக்காத தங்கம் (குமுதம் இதழுக்கு) !

------------------------------------------------------------------------------------

     

குமுதம்  வார இதழுக்கு  எழுதி  அனுப்பிய

கவிதை !

(ஆண்டு 1971)

------------------------------------------------------------------------------------

 

 

காணக்    கிடைக்காத    தங்கம் !  --  கண்டு

…….கைப்பற்ற   நான்மெல்ல   சென்றேன் !

நாணித்    தலைசாய   நின்றாள் !   -  இதழ்

…….நாடி   அவள்பக்கம்    சென்றேன் !

ஊடல்   மிகக்கொண்டு   நின்றாள் ! -  அன்பை

…….ஊற்றிப்    பருகிடத்    தந்தேன் !

பேடை   விரைந்தோடிச்   சென்றாள் ! -  நான்

…….பித்துப்    பிடித்தங்கு    நின்றேன் !

 

தேனைச்   சுவைக்கின்ற    வண்டு ! -  பூவின்

…….தீமைக்கு  வழிகோலு  மாமோ ?

கானில்  பொழிகின்ற  பால்போல் ! -  பெண்மை

…….காய்வதால்  யாருக்கு  நன்மை ?

தீயில்     புடமிட்டால்    அன்றி !   -  பொன்

…….தேறிடுமோ    குறை     வின்றி ?

கோயில்   சிலைபோல   வாழ்ந்து ! -  வெறும்

…….கோலப்  பொருளாதல்  நன்றோ ?

 

ஆடும்   நினைவலை    கோடி !   -  உள்ளம்

…….அறியாது    மறைவதேன்    ஓடி ?

வாடும்    பயிருக்கு    நீர்போல் !  -  அன்பை

…….வாரி     வழங்கிடின்    தீதோ ?

பாவை     அருள்புரி    வாளோ ?   - எனைப்

…….பற்றித்    தழுவிடு     வாளோ ?

தேவை  உரைத்திட்டே  னம்மா !   -  இன்பம்

…….தந்து    அருள்செய்கு    வாயே !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 22]

 {05-06-2022}

------------------------------------------------------------------------------------