தமிழா ! இது தமிழா ! – உன் நாவினிலே தவழுமொழி தமிழா ! அட தமிழா !
அமிழ்தான
செந்தமிழை எங்குதான் தொலைத்தாயோ ?
----ஆங்கிலமாம் உமி கலந்து அரைக்கிறதே உன் வாய்தான் !
உமி என்றும்
உமிதான் அது உன் மொழிக்கு ஈடாமோ ?
------உன் தமிழைச் சிதைக்கின்றாய் ! உனக்கெதற்கு வெள்ளாடை ?
தனித் தமிழில்
பேசுதற்குத் தகவி ழந்தாய் தமிழ் மகனே !
------தரம்
குறைந்தாய் பிறமொழியைத் தழுவுகின்றாய் நின்னுரையில்
நுனி நாக்கில்
ஆங்கிலத்தைக் கொண்டு வந்து
இருத்திவிட்டாய் !
------நுந்தமிழை
வீழ்த்திவிட்டு நொண்டுகிறாய் தமிழ் பேச !
சுரணை கெட்டு
அலைகின்ற சோம்பேறித் தமிழ்மகனே !
-------சொந்தமொழி வீழந்துவிட்டால்
சோறுனக்கு யாரிடுவார் ?
திரணைதனைத் தின்று
விட்டு தெருத் தெருவாய் அலைவாயோ ?
-------தீந்தமிழா ! சிந்திக்கும் திறமதையும் இழந்தனையே ?
ஆறறிவு உருவிருந்தும்
பகுத்தறிவு உனக்கிலையே ?
--------அருந்தமிழைத் தள்ளி விட்டு ஆங்கிலத்தைப் போற்றுவதா ?
சாறுதனை
ஒதுக்கிவிட்டுச் சக்கைதனை உண்ணுவதோ ?
---------சல்லியெனத்
தாழ்ந்துவிட்ட சாரமிலாத் தமிழ்மகனே !
பள்ளிகளில் கல்லூரிப் படிப்புகளில் ஆங்கிலம் தான்
---------பயிற்றுமொழி அலுவலகப் பயன்பாட்டில் வெள்ளைமொழி
கள்ளிச்
செடிகளுக்குக் காலமெலாம் நீர் வார்க்கும்
---------காளவாய்த்
கமிழ் மகனே கண்ணிரண்டும் குருடாமோ ?
ஆங்கிலத்தை
அகற்றிவிட்டு அருந்தமிழைக் கையிலெடு !
---------அறிவிழந்து
மொழிக் கலப்பில் அமிழ்ந்துவிளை யாடாதே !
தேங்கனியாம்
தமிழுக்குத் தீங்குவிளை மொழிக்கலப்பை
---------திண்ணமுடன்
விட்டுவிடு ! தென்னவனே மாறிவிடு !
அறிவார்ந்த
தமிழ்மகனாய் அடலேறே மாறிவிடு !
---------அரசியல்
சகதிகளில் அரத்தமதைச் சொரியாதே !
செறிவான சிந்தனையைக் கையிலெடு, கிளர்ந்து எழு ! !
!
----------செம்மாந்த
தமிழ்மொழியைப் போற்றிடுக ! காத்திடுக
வீட்டிற்குள்
ஆங்கிலத்தின் விளைச்சலதை அழித்துவிடு !
--------வெறியூட்டும்
திரையுலக வீணர்களை வீழத்திவிடு !
நாட்டிலினிக் கலப்புமொழி
நாகரீகம் ஒழியட்டும் !!
--------நம்மொழியைக்
காத்திடுவோம் ! நல்லவர் காள் ! அணி திரள்க
!