என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 2 செப்டம்பர், 2024

பாடல் (72) திரு.இராமலிங்கம் --- திருமதி.திலகவதி திருமண நாள் வாழ்த்து !

 

திரு.இராமலிங்கம் --- திருமதி.திலகவதி 
34-
ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து
******************************************
கடிநெல்வயல் திரு.கா.இருளப்பத் தேவர் --திருமதி.இராஜம்

அம்மையாரின் மகனும் மருமகளும், திருமதி. கலையரசி கண்ணன்,

திருமதி. சங்கீதா தியாகராஜன், திரு.ஸ்ரீநாத் இராமலிங்கம் ஆகியோரின்

பெற்றோருமான திரு.இராமலிங்கம் -- திருமதி. திலகவதி இணையரின்

இல்லற வாழ்வு 33 ஆண்டுகளைக் கடந்து 34-ஆம் ஆண்டில் இன்று (2-7-2015)

பயணிப்பதை முன்னிட்டு, அணிவிக்கப் பெறும் வாழ்த்துப் பாமாலை !


********************************************

இருளப்பத் தேவர், அம்மை


     
இராசம்மாள் இணையின் செல்வன் !


அருளப்பர் உமையொரு பாகன் !


     
அடிதொழும் இராம லிங்கன் !


திருவளர் திலகவதி யாள் !


     
திருக்கரம் பிடித்த நன்னாள் !


முருகிய முப்பது யாண்டு !


     
மூன்றையும் கடந்தது இந்நாள் !



சங்கமும் மகரம் மீனும் !


     
தரளமும் முத்தும் தோன்றும் !


வங்கநீர்க் கரையில் முளைத்த


     
வளவனின் தோன்ற லே,நீ !


பொங்கிடும் வளங்கள் யாவும்


     
புலனுறத் துய்ப்பாய் வாழ்க !


மங்கைநின் மனையாள் திலகா !


     
மகிழ்வுடன் வாழ்க ! வாழ்க !



வானுறு மதியின் தண்மை !


     
வாய்மொழிச் சொல்லில் கொண்டாய் !


கானுறு புலியின் தீரம் !


     
கண்களில் விதைத்தாய் வாழி !


தேனுறு நட்பும் உறவும் !


     
திகட்டுமோ உனக்கு வாழி !


மானுறும் பொழிலாய் வாழி !


     
மனைவளம் ஓங்குக ! வாழி !


 -----------------------------------------------------------


ஆக்கம் + இடுகை,

வை . வேதரெத்தினம் 

ஆட்சியர்,

"தமிழ்ச்  சிப்பி" வலைப்பூ 

(02-07-2015)

-----------------------------------------------------------