06-09-2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு புலவர் பேரவையின் இணையவழிப் பாட்டரங்கில் முன்னிலை வகித்து நான் படைத்த பாடல் !
------------------------------------------------------------------------------------------------
ஆட்சிமொழி தமிழென்றார்
ஐம்பத்து
எட்டுமுதல் !
.....ஆயினும் நடைமுறையில் செயல்முறையில்
விரைவில்லை !
மாட்சிமிகு அமைச்சர்கள், மாணவர்கள், அலுவலர்கள்
.....மனம்வைத்தால் செயலாக்கம் விரையாதோ ? வளராதோ ?
ஊருக்கு ஊர்கூட்டம் கூடுகிறோம் பேசுகிறோம் !
.....உருப்படியாய் ஏதேனும் சொல்லாக்கம் நடந்ததுவா ?
பேருக்குச் சிலபேர்கள் கருத்தரங்கு ஏறியதால்
.....பெற்றபயன் யாதோகாண் ! பெரியீரே சிந்திப்பீர் !
தமிழ்நாட்டில் தமிழுணர்வு நாள்தோறும் குறைகிறது !
.....தமிழ்க்கல்வி நிலையங்கள் ஒவ்வொன்றாய் மறைகிறது !
அமிழ்தான மொழிவடிவம் ஊடகத்தால் சிதைகிறது !
.....அய்யகோ இதைத்தடுக்க அரசினர்க்கும் பொழுதில்லை !
பொங்குதமிழ் அங்காடிப் பலகைகளால் வீழ்கிறது !
.....புற்றீசல் போல்பதின்மப் பள்ளியெங்கும் சூழ்கிறது !
தங்குதடை இன்றிதமிழ்ப் பேசுதற்கு ஆளில்லை !
.....தரமில்லா தாளிகைகள் மொழிக்கலப்பில் மூழ்குதையா !
ஆன்றோரே ! சான்றோரே ! அரங்கிலுள்ள நாவலர்காள் !
.....அன்னைமொழி நலிவடைதல் அழகாமோ ? அறமாமோ ?
மன்பதையில் நம்மொழியும் மாண்புதனைப் பெறவேண்டும் !
.....மனம்வைத்தால்
அத்துணையும் வயமாகும் ! இஃதுண்மை !
கலைச்சொற்கள் தமிழூற்றில் ஊருணியாய் வரவேண்டும் !
.....கற்றோர்தம் கடனாற்றி மொழிக்கேற்றம் தரவேண்டும் !
அலையலையாய் பிறசொற்கள் மொழிமாற்றம் பெறவேண்டும்
!
…..அன்னைத் தமிழ்மொழி நம் உயிருக்கு
நிகரன்றோ ?
அன்னைத் தமிழ்துறந்து ஆங்கிலத்தைக்
கொண்டாடும்
…..அறிவிலிகாள் உமைத் தமிழர் எனவுரைத்தல்
பேரிழிவு !
இன்னமுதத் தமிழ் நமது உயிருக்கு நிகர் நேர் நேர் !
……ஏமாளித் தமிழர்களே இனியேனும் ! திருந்திடுவீர்
!
------------------------------------------------------------------------------------