புதுவையில் பிறந்து வளர்ந்து, பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பொன்விழா மலர் வெளியீடு தொடர்பாக நான் (வை.வேதரெத்தினம்) எழுதி மின்னஞ்சல் வாயிலாக 19-07-2015 அன்று அனுப்பிய வாழ்த்துப் பா !
*********************************************************************
பூந்தமிழ் அறிஞர் கவிஞர்கள் எல்லாம் 
          புதுவையில் மலர்வதும் புதுவிதியோ !  
                  பொன்மனச் செம்மல் பாரதி தாசன்
                          பூத்தது புதுவையின் தலைவிதியோ !
சேந்திய தமிழை ஏந்திய கவிஞரை
           செய்தவர் கிருட்டிண சாமியையா
!
                  சிசுவாம் பாரதி தாசனின் தாயார்
                           சந்திர அம்மை வாழியலோ !
ஈந்திறக் கவிஞர் ஐம்பது ஆண்டில்
           எத்துணை உயரம் வளர்ந்திட்டார்
                  எங்கள் தமிழின் அழகை, புகழை,
                         எங்கணும் எடுத்து ஓதிட்டார் !
ஏந்திரப் பாடகம் பிரான்சு நாட்டில்,
          எத்தனை இலக்கியம் படைத்திட்டார்.
                ”ஏக்கம் நூறு” “காதல் ஆயிரம்”
                         இளங்”கனி விருத்தம்” தொகுத்திட்டார் !
“கண்ணன் அந்தாதி” “காதல் நாற்பது”
          ”கம்பன்  சிறப்பு
 அந்தாதி”
                ”கவிதைத் தலைவன் கண்ணன்
தாசன்”
                          கமழுது நூல்மணம் கபிலன்நீ !
ஒண்மதி “மின்வலைப் பூக்கள் ஆயிரம்”
          ஒழுகிசை “தமிழ்த்தாய் அந்தாதி”
                உயர்”தமிழ் இலக்கணம்” ”முகநூல் பூக்கள்”
                       உரை”சொல் ஓவியம்” மதிமீதி !
விண்மதி தண்மதி “வெண்ணிலவே புகழ்
          வெண்ணில வே”திறம் பாடினையே !
                   விருத்தம், வெண்பா எனக்கவி மாலைகள்
                           விரைந்தே பதின்மம் சூடினையே !
கண்வளர் “நற்றமிழ்ப் பாவலர்” ஏந்தல்
          ”கவிதைச் செல்வர்” பட்டங்கள்
                 ”கவிஞர்”  “மொழிப்போர் மறவர்” என்பன
                           கார்முகில் ஈட்டிய சிட்டங்கள் !
“சொற்பொழி” 
“கவிதை”  “இலக்கணம்” 
‘இலக்கியம்”
            சொன்மலை விரும்பும் புலமல்லோ !
                   சோழன் வழிமகன் 
சுந்தரத் தமிழில்
                            சுளைகள் அளிப்பது அழகல்லோ !
பொற்புறு ஆய்நிலம் “அயிரோப்  பா”மிசை
           புகல்தமிழ் விதைத்துப் போற்றுகிறார் !
                    போகும் ஊர்தனில் கம்பனின் பெயரும்
                             பொலிவுறத் தமிழ்ப்பணி ஆற்றுகிறார் !
விற்கணை கொண்டு வேற்றகம் சென்றார் :
           வென்றார் ! 
சோழக  நாயகரே
!
                   வெண்டமிழ் கொண்டு மண்டக மெங்கும்
                              வென்றார் ! குன்றார் பாவலரே !
நற்றமிழ் மணியே ! நவநிதிக் 
குவையே !
          நறையே ! இறையே ! பாவேந்தே !
                   நலமுடன் 
வாழ்க !  நனிபுகழ்
பெறுக !
                             நாவுக்  கரசே
வாழியவே !
சொல் விளக்கம்; (01) அலோ = அசைச் சொல் ; (02) ஈந்திறம் = தமிழ் ஈகைத் திறன் ; (0) ஏந்திரப் பாடகம் = எந்திரங்கள் இயக்க ஒலி (தொழில் வளம் மிக்க நாடு) ; (04) பத்தினை= பத்து தொகுதிகள் ; (05)சிட்டங்கள் = சிறப்புகள் ; (06) சொன்மலை = சொல்லின் செல்வர் (07) பதின்மம் = பத்து (08) ஆய்நிலம் = அழகிய நிலம்.
********************************************
--------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------   
