என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 3 ஜூன், 2022

பாடல் (37) (1970) பால் பொழியும் நிலவொளியில் படுத்திருந்தேன் !

-------------------------------------------------------------------------------------

பனிபடர்ந்த மலையின் மீது

படுத்திருந்தேன் சிலையைப் போலே

என்னும் கண்ணதாசனின் கவிதையைத் தழுவி

எழுதிய ஒரு பாடல் !

(மெட்டுக்குப் பாட்டு)

(ஆண்டு.1970)

 

--------------------------------------------------------------------------------------

 

 

பால்பொழியும்     நிலவொளியில்     

…..படுத்திருந்தேன்      ஓர்நாள்    தூய

…..…பளிங்கினிலே      வடித்தமலர்ப்    

……..…பதுமையொருத்தி    வந்தாள் !

 

வேல்விழிகள்      இரண்டுமெனை    

..…வீழ்த்தமையல்       கொண்டேன் - அவள்

…..…வெட்கமுடன்       அருகமர்ந்து          

……..…முத்தமொன்று       தந்தாள் !

 

கன்னமெனும்       மாதுளைகள்       

..…சிவந்திருக்கக்     கண்டேன் ! அவள்

…..…காந்தள்விரல்       கொண்டுஅதை       

……..…மெல்லமூடி          நின்றாள் !

 

மின்னுகின்ற        பல்வரிசை            

…..முத்துக்களோ     என்றேன் ! அவள்

…..…மெல்லநகை        செய்துவேறு          

……..…என்னவேண்டும்     என்றாள் !

 

தேனொழுகும்       கொவ்வையிதழ்      

…..ஏனடியோ          என்றேன் ! அவள்

……..தித்திக்கின்ற        அமுதமதை           

……..…வழங்குதற்கு         என்றாள் !

 

கூன்பிறையாம்     புருவங்களைக்       

…..கொடுத்துவிடு     என்றேன் ! அவள்

…..…கொஞ்சலாக        மன்னவனே        

……..…மலர்க்கணையது    என்றாள் !

 

கார்குழலில்        மழைமுகிலைக்      

..…கவர்ந்ததுஏன்      என்றேன் ! அவள்

…..…கண்துயிலும்        தலைமகனின்        

……..…பஞ்சணையாம்       என்றாள் !

 

நீர்மலரும்           தாமரைப்பூ          

..…மேனியடி           என்றேன் ! அவள்

…..…நீரணைத்து          மகிழ்வதற்கு       

……..…வழங்கிடுவேன்       என்றாள் !

 

மின்னலிடை        நெளிகிறதே          

..…ஏனடியோ           என்றேன் ! அவள்

…..…மாலையாக          நின்கரத்தில்         

……..…விழுவதற்கு           என்றாள் !

 

அஞ்சுகமே !         ஆயிழைநின்   

.....பெயரெதுவோ        என்றேன் ! - அவள்    

…..…அமைதியுடன்......................என்று        

……..…ஒருமுறைதான்      சொன்னாள் !

 

ஞ்சமலர்          உடல்தழுவி        

.....இடைத்துகிலைத்   தொட்டேன் - ஆனால்

…..…கருங்குருவி        ஒலியெழுப்பக்      

……..…கனவுகலைந்து          நின்றேன் !

 

 

------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி: வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 20]

{03-06-2022}

 -------------------------------------------------------------------------------------