என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

பாடல் (06) (1965) பூந்தமிழ்ச் சிறப்பைக் கண்டு (இந்தி எதிர்ப்பு)

==================================================

 

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புக்

கிளர்ச்சி நடந்தபோது

இயற்றிய கவிதை !

(ஆண்டு 1965)

 

==================================================

    மொழி காக்கும் போருக்கு வழிகாட்டும் ஒளிக்கீற்று !

==================================================

 

       பூந்தமிழ்ச்           சிறப்பைக்        கண்டு

               பொலிவினை       அடையா           இந்தி,

       காஞ்சிரம்           நிகர்த்த           கங்கைக்

               கயவர்கள்           எல்லாம்           இன்று

       செஞ்சரம்           கையில்          ஏந்தி,

               செந்தமிழ்           நாட்டை            நோக்கி,

       வஞ்சக              எண்ணத்         தோடு,

               வருவதைக்         காணாய்           தோழா !

       தீரமே               மனதிற்           கொண்டு

               திடமுடன்           எதிர்க்க            வாராய் !

       தூரமே              விரட்டிச்          செல்வோம்

               துணிவுடன்          வாராய்            தோழா !

       வீரமே               விலைபோ       காது !

               வெற்றியும்          நமைப்பிரி           யாது !

       ஆரமே              அளிப்போம்       தாயாம்,

               அருந்தமிழ்          காப்போம்          வாராய் !

 

----------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு 2053: மீனம் (பங்குனி) 22]

 {05-04-2022}

 

------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக