என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 25 ஏப்ரல், 2022

பாடல் (14) (1968) முகவை தந்த முத்து !

-------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்பு பயிற்சித் துறை

இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில்

உதவியாளராகப்

பணியாற்றிய திரு. கணபதி அவர்கள்

புதுக்கோட்டை வந்திருந்த போது அவருக்கு

எழுதி அளித்த கவிதை !

(1968 - ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

-------------------------------------------------------------------------------------

                           

முகவை தந்த முத்து - எங்கள்

.....முத்தமிழின் சொத்து !

..........முற்றியுடல் வற்றியுயிர்

...............பற்றியநல் வித்து !

 

அகவை யஞ்சு ஆறு உள்ளம்

.....அருங்கனியின் சாறு !

..........அன்புமனம்  கொண்டுசினம்

...............நன்றகழும்  ஏறு !


கடமை யொழுகுங் காளை பைங்

.....கமுகுதமிழ்ப்   பாளை !

..........கள்ளமிலா வெள்ளைமனம்

...............துள்ளியெழும்  வாளை !

    

மடமை சாடும் மன்னன் ! பெயர்

.....மயில்முருகன் அண்ணன் !

..........மனமகிழ்ந்து  தினமுயர்ந்து

...............இனிதுவாழ்க கன்னன் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

"தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 12]

{25-04-2022}

-------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக