என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

பாடல் (15) (1968) தீந்தமிழ்ச் சுவைநாடி திரிகின்ற !

------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை

அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்

 திரு.கதிரேசன், என் நெஞ்சக் குடிலில் இடம் கேட்டார் !  

நானோ

சங்கத் தமிழின் நிலை சொன்னேன் !

(1968 – ஆம் ஆண்டு எழுதிய பாடல்)

------------------------------------------------------------------------------------


தீந்தமிழ்ச்    சுவைநாடித்     திரிகின்ற   தம்பி !

.......தேனூறும்    தொழிற்கல்வி    மலரூதும்   தும்பி !

வெந்தழலாம்  இந்தியதன்  வேதனையால்  கும்பி,

.......வெந்தழிய   அன்னையுனை   நாடுகிறாள்   நம்பி !

சட்டமெனும்  காவலுடன்  சிறைக்கதவின்  கம்பி !

.......செந்தமிழின் உரிமைதனைச்  சாய்ப்பதுவோ  இந்தி !

கொட்டமதை  அடக்கிடுவோம்  குமுறியெழு ! நெம்பி,

.......கொடுவிலங்கு அறுத்திடுவோம்  குறுங்களிறே வாராய் !!

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 13]

{26-06-2022}

------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக