என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 27 ஏப்ரல், 2022

பாடல் (16) (1968) கழனியில் விளையும் கதிர்நெல் மணிகள் !

-------------------------------------------------------------------------------------

        பாபநாசத்தில் பணி புரிகையில் எழுதிய    

    பொங்கல் வாழ்த்து !

    (1968-ஆம் ஆண்டு எழுதிய பாடல்)

-------------------------------------------------------------------------------------

 

             கழனியில்  விளையும்  கதிர்நெல்  மணிகள் !

                 காவினில்  விளையும்  கமுகும்  தெங்கும் !

             செழுமணல்  விளையும்  செயிர்தீர்  கரும்பு !

                 செம்மண் விளையும்  பைங்கனி  வாழை !

             புழுதியில்  விளையும்  பொன்மணி  மஞ்சள் !

                 பொடிமணல்  விளையும்  பூவா   இஞ்சி !

             கழிநிலம்   விளையும்   கவின்சா   மந்தி !

                 கலந்துற  வருவாள்  கனித்தமிழ்த் தையல் !

             விழுமிய  பொங்கல்  விளைத்திட  வருவாள் !

                 வேதனை  தீர்த்து  வாழ்ந்திட அருள்வாள் !

             உழைத்திடும்  மக்கள்  உவப்புடன்  மகிழ்வார் !

                 உள்ளம்  நிறைவுற  நலம்பெற  வாழ்வோம் !

 

-------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam@gmail.com]

 ஆட்சியர்,

 "தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 14)

{27-04-2022}

 -------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக