என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

பாடல் (13) (1968) அன்பைச் சொரிந்து வரும் அருவி (திரு.இரமணிக்காக)

------------------------------------------------------------------------------------

                       வேலை வாய்ப்புப் பயிற்சித் துறை

இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய திரு. இரமணி அவர்கள் புதுக்கோட்டை வந்திருந்தபோது எழுதி அளித்த கவிதை. (ஆண்டு 1968)

-------------------------------------------------------------------------------------

 

                 அன்பைச்  சொரிந்து  வரும்  அருவி ! எளிமை

                 ....அழகு  ததும்புகின்ற  ஊற்று ! ஒளிரும்

                 பொன்னில் உறவுகொண்ட  மேனி ! விழியில்

                 ....பொங்கி  வழிந்துவரும்  நிலவு ! எமது

                 நெஞ்சில்  குடிபுகுந்த  தென்றல் ! அழியா

               ....நினைவில்  வளர்ந்துவரும்  கவிதை ! அமுதத்

                 தஞ்சை    உலகளித்த  தரளம் ! மின்னும்

                 ....தங்க    மதுர    மணிக்    கலசம் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

"தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 09]

{22-04-2022}

--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக