என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

பாடல் (12) (1967) அத்தியனார் வளர்த்தமொழி !

 

-----------------------------------------------------------------------------------------

      தமிழகத் தலைவர்களும் அவர்தம் சிறப்பும் !

         ! – கதம்ப மாலை – !

    ( 1967-ஆம் ஆண்டு எழுதிய பாடல்!)

------------------------------------------------------------------------------------------

 

அகத்தியனார்  வளர்த்தமொழி  அன்னைமொழி  தமிழாம் ! அதில்

      அடங்கியுள்ள  எழுத்துகளில்  முதலெழுத்து   வாம் !

மகத்தான     சாதனைகள்     நிகழ்த்திவரும்   மேதை,

       மாண்புமிகு    முதலமைச்சர்  பெயர்முதலும்  வாம் !

 

பிறந்தவுடன்   குழவியது    வாய்திறந்து  அழுமாம் ! -  அந்த

      பிள்ளைதனின்  அழுகைதனில்  ஒலித்திடுதல்  வாம் !

சிறந்தபெரும்  தவப்புதல்வர்  இராசாசி     என்பார்,

       செல்லமொழி  ஆச்சாரி””       பெயர்முதலும்  வாம் !

 

உலகினையே   உருவாக்கி   உலவவிட்டான்  ஒருவன் ! அவன்

       உற்றபெயர்   இறைவன்அதில் ஒலித்திடுதல்  யாம் !

அலகினையும்  கூர்த்தமதி   அருள்மிகுந்த     தீரர்,

       இஸ்மாயில்  எனும்பெரியார்    பெயர்முதலும்  யாம் !

 

வைகறையின்  இருளகலப்     பவனிவரும்   பரிதி ! தினம்

      வையகத்தைச்  சாடிவரும்    வறுமையெனும்  பேயும்,

கைகட்டி       அடங்கிவரும்,   கதிரவனாம்   அண்ணா !

      கருணைமிக்க  ஆட்சியினால்  தமிழகமும்      வாழும் !

 

கப்பலுக்குத்  திசைகாட்டும்    கருவியது     விண்மீன் ! நெஞ்சில்

      டமுள்ள   மனிதர்களின்   கயமையினைப்   போக்க,

ஒப்பரிய     உத்தமராம்      உலகத்தின்     விண்மீன் !

       ஓங்குபுகழ்    இராசாசி       உள்ளவரை       சாலும் !

 

இரவுதனில்  பிறைமதியும்  குளிர்நிலவைப்  பொழியும் வாழ்வில்

      இன்னலுறும்    மாந்தரது     இடர்ப்பாடு     நீங்கும் !

புரவலராம்  இஸ்மாயில்   பிறைமதியாம் !  அன்னார்,

      புவிமிசையில்   வாழும்வரை  பயநினைவும்  வேண்டா !

 

உயிருக்கு  ஒளியூட்டி     உய்விக்கும்   கோள்கள் ! விண்ணில்

      ஒளிப்பிழம்பு   பானுமதி    விண்மீன்கள்     மூன்று !

பயிருக்கு   வேலியிட்டுப்  பாதுகாக்கும்  தலைவர்  - நமக்கு

      பானுமதி     விண்மீனாய்  விளங்குகின்றார்  உண்மை !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 06]

{19-04-2022}

---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக