என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

பாடல் (11) (1967) பைங்கிளியும் தேன்குயிலும் !

=================================================

      பொங்கற் புதுநாளில் பொங்கி வந்த பூங்கவிதை 

                              (1967-ஆம் ஆண்டு எழுதிய 

                          பொங்கல் வாழ்த்துப் பாடல் )

=================================================

      பைங்கிளியும் தேன்குயிலும்

             பழகிவரும் சோலை !

                   நைந்துருகிப் பழச்சாறு

                        மணங்கமழும் சாலை !

 

       கள்வடியும்  முளரிமலர்

            கண்மலரும்   காலை ! 

                   புள்ளினங்கள் துயிலெழுந்துக்

                        குரல்கொடுக்கும்  வேளை !

 

       செங்கரும்பும்  செந்நெல்லும்

            சீர்மனையில்  சூழும் !

                   செவ்வந்திப்  பூங்கதலி             

                           மஞ்சள்வளம் கூறும் !

 

       இல்லமதில்  எழில்பெருகும் !

            இளங்கிளையர்   கோலம் !

                   இருவிரலின் திறம்பகரும் !

                         இருள்விலகும் நேரம் !

               

       மண்பானை அடுப்பிலிட்டு

            மகிழ்ச்சியுடன்   அன்னை !

                   மணிக்கரத்தால் கிளறிவிடப்

                         பொங்கிவரும் பொங்கல் ! ,

 

       பொங்கலோ ! பொங்கலென

            எங்குமொலி  பொங்கும் !!

                   பூந்தமிழர் நெஞ்மெலாம்

                        இன்பமதில் துள்ளும் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ச் சிப்பி”வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 29]

{12--4-2022}

--------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக