--------------------------------------------------------------------------------------
கடல் புறா என்னும் தொடர்கதைக்காக
“லதா” வரைந்த படத்தை வைத்துக்கொண்டு எழுதிய
ஒரு கவிதை !
(ஆண்டு. 1970)
--------------------------------------------------------------------------------------
சிவந்த கன்னமும்
செம்மா துளைவாயும்
…..சேல்போன்ற நீளவிழியும்,
குவிந்த புருவமும் கோலக்
கருங்குழலும்
…..குங்குமப்பூ தோய்ந்த உடலும்
அமுதம் மொழிகின்ற செந்நாவும் மெலிந்துமிக
…..அழகூட்டும் மின்னலிடையும்
குமுதம் எனையின்றுக் கொல்லாமல் கொல்கிறதே,
…..குயிலேநீ ஓடிவருவாய் !
அன்பைப் பரிமாறி அழகுச் சோலைதனில்,
…..ஆலோலம் பாடிமகிழ்வோம் !
இன்ப மழைத்துளியாய் இனிது வாழ்ந்திடுவோம் !
….. எந்நாளும் இணைந்துவாழ்வோம் !
----------------------------------------------------------------------------------------
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]
{31-05-2022}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக