என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 16 ஜூன், 2022

பாடல் (48) (1975) நேரிய பாதையில் நடந்திடப் போந்தால் ! (நெட்டெழுத்தேட்டுப் பதிவு)

--------------------------------------------------------------------------------------

மாணவர்களின் நெட்டெழுத்துக் குறிப்பேட்டில்

பதிவு செய்யப் பெற்ற எனது

முத்திரைக் கவிதை !!

(ஆண்டு 1975)

--------------------------------------------------------------------------------------

             

நேரிய    பாதையில்   நடந்திடப்  போந்தால்

.....நேர்ப்படும்    இடையூறு ! ---அதைக்

கூரிய    மதியால்     வென்றிட  எண்ணல்

.....குவலயக்     கோட்பாடு !

சீரிய     வாழ்வும்     செவ்விய   நோக்கும்

.....சிறப்பது       பண்பாடு ! --- அதைப்

பாரியல்  போடுப்       பற்றிட   வாய்க்கின்

.....பல்கிடும்      பெரும்பீடு !

 

---------------------------------------------------------------------------------------

 

வண்ண   மலரூதும்   வண்டனைய   வாழ்வினிலே

.....வறுமை,     நெடுநீர்மை,       வாளாமை       அகற்றிடுக !

திண்மை,     தாளாண்மை,   திறமை,       வளம்பெருக்கும்

.....தித்திக்கும்   தமிழ்க்கனியே !   தேனிலவே !  வாழியநீ !

 

---------------------------------------------------------------------------------------

 

கற்பாறையில்      விதைக்கப்படுவது  முளைப்பது இல்லை !

.....கருத்தோட்டத்தில்  இலக்கில்லாதது    தழைப்பது  இல்லை !

பொற்கிண்ணத்தை  உலையிட்டாலும்   சோறாவ   தில்லை !

.....புகழ்பெற்றவன்     வீட்சியடைந்தால்   மீட்சியும்   இல்லை !

   

ஒரே நோக்கம் ---அஃது உயர்வுக்குப் படிக்கல் !

நேரிய  பாதை அது நிறைவுக்குக் கடைக்கால் !

வாழ்க !  வளம்பெறுக !!

 

--------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 02]

 {16-06-2022}

----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக