என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 28 மார்ச், 2022

பாடல் (03) (1963) காவிய மலருட் புகுந்தினிமை !

=================================================

அரியலூர்  மாவட்டம் புங்கங்குழி  ஒட்டக்கோயிலைச் 

சேர்ந்த

கல்லூரி நண்பர் தியாகராஜனின் நெட்டெழுத்து ஏட்டில் 

(AUTOGRAPH) நான் எழுதிப் பதிவு செய்த 

ஒரு கவிதை

(1963 – ஆம் ஆண்டு எழுதிய கவிதை))

==================================================

                     

காவிய      மலருட்      புகுந்தினிமைக்

…….கருத்துக்        குவியல்      தேனெடுத்து,

மேவிய     நும்முளத்    தேனீக்கள்

…….மெழுகுக்        குடிலாம்      நுமதுடலில் ,

கோவிய    லன்னக்      காத்துவரின்

…….குழுமிய         பயன்தான்    என்னென்கொல் !

ஓவிய       உருவோய் !  என்னண்ப !

…….உதவுக          தேனை        உலகிற்கே !

 

=================================================

 -----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

 {28-03-2022}

------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக