என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 30 மார்ச், 2022

பாடல் (04) (1963) புரட்சிக் கவியே பொன்மணியே !

=================================================

கவியரங்கத்தில் பங்கேற்கத் தயங்கிய தஞ்சை

மன்னர் சரபோசிக் கல்லூரி நண்பர்

இரா.தமிழரசனுக்கு விடுத்த கவிதைக் கடிதம்

( 1963 -ஆம் ஆண்டு எழுதிய கவிதை)

=================================================

 

புரட்சிக்           கவியே !          பொன்மணியே !

                 பொலிவுறு          விளக்கே !        தமிழரசே !

திரட்சிக்          கனியே !          தமிழ்த்தேனே !

                 தென்னவர்          கோவே !         தேன்மதியே !

மருட்சி           கொளாதே !      மயங்காதே !

                 மகிழ்ச்சி            யுடன்நீ           கவிபாடு !

தருணம்          காலம்            பாராதே !

                 தமிழ்த்              தூதாற்று !        தாய்போற்று !

 

==================================================

 

--------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com]

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 16]

 {30-03-2022}

 

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக