என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 25 மே, 2022

பாடல் (29) (1970) பால்நிலவு கார்முகிலில் பதுங்கிவிளை யாடும் !

===================================================

குமுதத்தில் வெளிவந்த கடல் புறா தொடர்கதைக்காக

வரையப்பட்ட ஓவியத்தை மையமாக வைத்து

எழுதப்பட்ட ஓர் கவிதை !

(ஆண்டு 1970)

===================================================

 

பால்நிலவு    கார்முகிலில்  பதுங்கிவிளை   யாடும் ! அதன்

.....பார்வைதனில்  நின்வதனம்  பவளநிறம்  வீசும் !

கோலமயில்  சோலைதனில்  தோகைவிரித்   தாடும் ! உன்

.....குவளைவிழிப்  பூமலர்ந்து  கோடிமொழி  பேசும் !

குமுதமலர்    ஓடைதனில்   நீர்த்திரையி    லாடும் !  - நின்

.....கொவ்வையிதழ்  ஏக்கமுறக்  கூம்பிமுகம்  வாடும் !

அமுதமொழிப்  பைங்கிளியே !  ஆழ்கடல்நன்  முத்தே ! நின்

.....ஆசைமுகம்  காணவுளம்  அலைந்திடுதல்  ஏனோ ?

 

காரணத்தை    நானறியேன்    கனிமொழியே !  நின்பால்

.....கருணைகொண்ட   எனதுநெஞ்சு   கலங்கிதடு    மாறி !

ஆரணங்கு    நின்னிதயப்      பூங்குடிலில்      ஏறி !

.....அன்புகாண    ஏங்குவதேன் ?     ஆருயிரே      கூறு !

கூறுவதைக்   கூறுநின்   குயில்மொழியாற்     கூறு !

.....கொன்றைமலர்  மேனியளே !     கூறுவதைக்    கூறு !

நாறுகின்ற   நறுமுல்லை   மல்லிகையைப்     போல !

.....நகைமுறுவல்   காட்டுகின்ற      நங்கையேநீ    கூறு !

 

-----------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு, 2053, விடை (வைகாசி) 11]

 {25-05-2022}

-----------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக