என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 29 மே, 2022

பாடல் (33) கனவில் வந்த கனிமுகம் ! (இசைக்கேற்ப ஒரு பாட்டு)

----------------------------------------------------------------------------------------

"வானில் முழு மதியைக் கண்டேன்"

என்னும் திரைப்படப்  பாடலைத் தழுவி,

அதே மெட்டில்

எழுதப்பட்ட கவிதை !

(ஆண்டு 1970)

---------------------------------------------------------------------------------------

  

கனவில்  வந்த  கனிமுகம்   ---  அந்தக்

…….கலைமகள்  எனது  திருமுகம் !

மனதில்  மலர்ந்த  மதிமுகம்  --  இன்று

…….மறைந்த  தேனிந்த  மறைமுகம் !

 

வேனில்  நிலவினை விழிகளில் கண்டேன் !

…….வேய்ங்குழல்  இன்னிசை  குரலில்  கண்டேன் !

மானின்  மருளவள்  மனதினில் கண்டேன் !

…….மயக்கம்  தந்தெனை  மறந்தவள்  சென்றாள் !

 

தேனின்  சுவையவள்  இதழ்களில் கண்டேன் !

…….தென்னம் பாளையைச் சிரிப்பினில் கண்டேன் !

வானின் வில்லொளி  வடிவினில்  கண்டேன் ! 

…….வருத்தம்  தந்தெனை மறந்தவள்  சென்றாள் !

 

கனிந்த  சுளைநிகர்  கன்னங்கள்  கண்டேன் !

…….கடல்விளை  சங்கம்  கழுத்தினில்  கண்டேன் !

குனிந்த  நடையினில்  குருகினைக் கண்டேன் !

…….கொடுந்துயர்  தந்தெனை  மறந்தவள்  சென்றாள் !

 

பனித்துளி  நீரெனத் தவிப்புடன்  நின்றேன் !

…….பாசம்  மிகுந்தெனை  அணைத்திட  வந்தாள் !

கனிச்சுவை  உண்டவள் கரங்களைத்  தொட்டேன் !

…….கண்மணி  விலகிட; கனவென  நின்றாள் !

---------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 [vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 15]

 {29-05-2022}

 --------------------------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக