என் சிந்தையில் விளைந்த கவிதை முத்துக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 11 ஜூன், 2022

பாடல் (46) (1972) வேதரெத்தினம் - கலைச்செல்வி திருமண அழைப்பிதழ்!

----------------------------------------------------------------------------------

திருமண  அழைப்பிதழ்

வை.வேதரெத்தினம் இரகு.கலைச்செல்வி

நாள் : 2—7—1972

----------------------------------------------------------------------------------

 

பெருந்தகை  வள்ளுவர்      பெயரால்    நிகழும்,

ஈரா          யிரத்துமூன்   றென்றுரை   யாண்டில்,

ஆனித்       திங்கள்        ஆனபத்      தொன்பது,

ஞாயிறு      காலை        நற்கதிர்      தோன்றி,

ஐயிரு        நாழிகை      அளவில்      செல்வி,

கலைச்செல்  விதனைக்     கைத்தலம்    பற்றி

வாழ்க்கைத்  துணையாய்   வரித்திட      உள்ளேன் !

ஆன்றவிந்    தடங்கிய     அருமைச்     சான்றீர் !

மனங்கவர்    நண்பீர் !      மகளீர் !      கிளையீர் !

அன்புடன்     எனதிவ்      வழைப்பினை ஏற்றுச்

சீர்மணம்     நிகழும்       சேரன்         குளமாம்

ஊரகம்       வருக !       உறுமெய்      யன்பால்

இல்லறம்    ஏற்றிடும்      எமக்கு

நல்லறம்     காட்டி         நல்வாழ்த்     தருள்கவே !

 

*********************************

அன்புடன்,

வை.வேரெத்திம்

 

-----------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

"தமிழ்ச் சிப்பி” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 28]

{11-06-2022}

------------------------------------------------------------------------------------


கலைச்செல்வி - வேதரெத்தினம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக